கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த ராம்குமார் ( 40 ) என்பவர் மீது கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்.
கோவை: ஆன்லைன் திருமண தகவல் அமையத்தின் மூலமாக இரண்டாவது திருமணத்திற்கு விண்ணப்பித்த பொது, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, ரூபாய். 15லட்சம் வரை கோவையை சேர்ந்த ஒரு நபர் மோசடி செய்துள்ளார் என கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சென்னையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரேவதி (32). இவரது கணவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, மறுமணம் செய்ய அவர் ஆன்லைன் திருமண சேவை மூலம் விண்ணப்பித்து அவருக்கு ஏற்ற துணையை தேடு வந்துள்ளார். இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தராம்குமார்( 40 ) என்பவர் ரேவதியை தொடர்பு கொண்டுள்ளார்.
தொடர்ந்து, ரேவதியின் செல்போன் எண்ணை பெற்ற ராம்குமார் ரேவதியை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அவர்கள் இருவரும் நட்பாக முதலில் பழகத் தொடஙகி, இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ரேவதியை உறுதியாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, ராம்குமார் தான் சொந்த தொழில் துவங்குவதாக கூறி 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் நகைகளை, தன்னிடம் பெற்றதாக ரேவதி அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக ராம்குமார், என் தொடர்பை மெதுவாக துண்டிக்க தொடங்கினார்.பின்னர்,அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.இதையடுத்து, சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த ராம்குமார் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி,பெற்றுக்கொண்ட பணம் மற்றும் நகைகளை திருப்பித் தருமாறு கேட்டபோது, ராம்குமார் பணம் நகைகளை திருப்பித் தர முடியாது என்று கூறியதோடு, அடித்து விரட்டியதாக ரேவதி புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரேவதி, கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராம்குமார் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் ராம்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ரேவதி (32). இவரது கணவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விபத்தில் உயிரிழந்தார்.
இதையடுத்து, மறுமணம் செய்ய அவர் ஆன்லைன் திருமண சேவை மூலம் விண்ணப்பித்து அவருக்கு ஏற்ற துணையை தேடு வந்துள்ளார். இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் நீலிகோணம்பாளையம் பகுதியை சேர்ந்தராம்குமார்( 40 ) என்பவர் ரேவதியை தொடர்பு கொண்டுள்ளார்.
தொடர்ந்து, ரேவதியின் செல்போன் எண்ணை பெற்ற ராம்குமார் ரேவதியை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்தார்.
இதையடுத்து, அவர்கள் இருவரும் நட்பாக முதலில் பழகத் தொடஙகி, இருவரும் பல இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். ரேவதியை உறுதியாக திருமணம் செய்து கொள்வதாக கூறி, ராம்குமார் தான் சொந்த தொழில் துவங்குவதாக கூறி 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 3 பவுன் நகைகளை, தன்னிடம் பெற்றதாக ரேவதி அவர் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஆனால், கடந்த சில மாதங்களாக ராம்குமார், என் தொடர்பை மெதுவாக துண்டிக்க தொடங்கினார்.பின்னர்,அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.இதையடுத்து, சென்னையில் இருந்து புறப்பட்டு வந்த ராம்குமார் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி,பெற்றுக்கொண்ட பணம் மற்றும் நகைகளை திருப்பித் தருமாறு கேட்டபோது, ராம்குமார் பணம் நகைகளை திருப்பித் தர முடியாது என்று கூறியதோடு, அடித்து விரட்டியதாக ரேவதி புகாரில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரேவதி, கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராம்குமார் மீது புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் ராம்குமார் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.