கோவையில் இந்து முன்னணி பிரமுகரை காவல்துறை உதவி ஆய்வலார் ஆபாசமாகப் பேசியதாக மறியல்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

கோவை போத்தனூர், சித்தனபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை போலீசார் ஆபாசமாக பேசியதாக சுந்திராபுரம் பகுதியில் இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம்.

கோவை: கோவை, போத்தனூர் சித்தனபுரம் பகுதியில் இந்து முன்னணி பிரமுகரை ஆபாசமாக பேசிய காவல்துறை உதவி ஆய்வாளரை கண்டித்தும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நேற்று கோவை சுந்திராபுரம் பகுதியில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்ய முயன்றதால் அங்கு பரபரப்பு நிலவியது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

இதுகுறித்து பேசிய இந்து முன்னனி மாநகர் மாவட்ட செயலாளர் ஆனந்த் கூறியதாவது:-

கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் சிலைகளை கரைப்பதற்க்கு அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், கோவை போத்தனூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தாமரை கண்ணன், போத்தனூர் சித்தன்னபுரத்தில் இந்து முன்னணி பொருப்பாளரிடம் மிகவும் ஆபாசமாகவும், வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளால் பேசியுள்ளார். 

அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். தி.மு.க அரசு, இந்து விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சம்பந்தப்பட்ட காவல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பாக போராட்டம் நடத்தப்படும் என்று கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...