கோவை கிணத்துக்கடவு அருகே பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் சென்ற மணமக்களை வாழ்த்திய கிராம மக்கள்..!

கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோடங்கி பாளையத்தில் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் சென்ற மணமக்களை கிராம மக்கள் வாழ்த்தினர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோடங்கி பாளையத்தில் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் சென்ற மணமக்களை கிராம மக்கள் வாழ்த்தினர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகேயுள்ள கோடங்கிபாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி, ராஜாமணி தம்பதியரின் மகன் பிரகாஷ், மற்றும் பணப்பட்டி செல்லக்குமாரசாமி, பத்மா தம்பதியரின் மகள் சரண்யாவுக்கு இன்று கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சிவன் கோவிலில் அதிகாலையில் திருமணம் நடைபெற்றது.

இதனிடையே, திருமணம் முடிந்து மணமக்களை காரில் அழைத்துச் செல்வது வழக்கம்.



ஆனால், அழிந்து வரும் கிராமிய கலாச்சாரத்தை பாதுகாக்கும் வகையில் மணமக்கள் திருமணம் நடந்த இடத்திலிருந்து மணமகன் வீடு வரை உள்ள 5 கிலோ மீட்டர் தூரம்வரை மாட்டு வண்டியிலேயே சென்றனர்.



விஞ்ஞான உலகில் பாரம்பரிய கலாச்சாரங்களை மறந்து புதிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், கிராமப்பகுதியில் உள்ள இளைஞர்கள் கிராமிய கலாச்சாரங்களை மறக்காமல், பாதுகாக்கும் வகையில் இது போன்று மாட்டுவண்டியில் சென்று கலாச்சாரத்தை பாதுகாக்கவே மணமகள் சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.



மணமக்கள் அதிகாலை நேரத்தில் கிராமப்பகுதிகளில் மாட்டுவண்டியில் சென்றதை கிராம மக்கள் பார்த்து வாழ்த்தினர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...