வால்பாறையில் ஜீப் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து - படுகாயங்களுடன் வாலிபர் மருத்துவமனையில் அனுமதி..!

கோவை: வால்பாறையில் ஜீப் மீது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கோவை: வால்பாறையில் ஜீப் மீது இருசக்கர வாகனம் மோதியதில் படுகாயம் அடைந்த வாலிபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறை நகரில் உள்ள வாழைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஷாபு (25). இவர் எம்.ஜி.ஆர் நகரில் உள்ள பர்ணிச்சர் கடையில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இன்று அவர் வேலை நிமித்தமாக சோலையாறு அணைக்கு இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்தார். வால்பாறை ஸ்டான்மோர் சாலையில் படகு இல்லம் அருகில் உள்ள வளைவில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற காரை முந்தி சென்றுள்ளார்.

அப்போது, எதிரே வந்த வால்பாறை நகராட்சி ஜீப்பின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில் ஷாபு மற்றும் அவருடைய நண்பர் தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் ஷாபுவிற்கு வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது.



ஷாபுவின் இருசக்கர வாகனமும் சேதம் அடைந்தது.

இதையடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர், இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...