கோவை: வால்பாறையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பூஜையில் குறைந்தளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: வால்பாறையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி சிறப்புப் பூஜையில் குறைந்தளவு பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மிகப்பழமை வாய்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ விநாயகப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகமும் பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் தீப ஆராதனை நடைபெற்றது.
இதனிடையே, கொரோனா தொற்றின் காரணமாக பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீ முருகன் கோயில் வளாகத்தினுள் மண்டபத்தில் சுமார் ஐந்தடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்து பூஜை நடைபெற்று வருகிறது.
இதில் குறைந்த அளவு பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பூஜையை முன்னிட்டு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில் முகக் கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.