'எனக்கு ஒருவர் பணம் தர வேண்டும்... உடனே வாங்கி தாங்க'... பொள்ளாச்சி சார்பு நீதிமன்றம் முன்பு மரத்தில் ஏறி தூக்கிட முயன்ற நபரால் பெரும் பரபரப்பு.!!

கோவை: பொள்ளாச்சி சார்பு நீதிமன்றம் முன்பு மரத்தில் ஏறித் தூக்கிட முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பொள்ளாச்சி சார்பு நீதிமன்றம் முன்பு மரத்தில் ஏறித் தூக்கிட முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார்பு நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் மரத்தின் மீது ஏறி கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக பொதுமக்களிடையேயும், காவல்துறையிடமும் தெரிவித்தும் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.

காவல்துறை கீழே இறங்கி வரும்படி தெரிவித்தனர். தனக்கு யாரோ ஒருவர் பணம் தரவேண்டும் தந்தால் மட்டுமே இறங்கி வருவதாகத் தெரிவித்தார். பின்னர் காவல்துறை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்து வலை விரித்துக் காப்பாற்ற முயற்சி செய்தனர்.

ஆனால் அந்த நபரோ தான் வைத்திருந்த துண்டின் மூலம் மரத்தின் கிளையில் தூக்கிட்ட நிலையில் மரத்திலிருந்து கீழே குதித்து யாரும் எதிர்பாராத வகையில் நடந்து கொண்டார். சற்றும் தாமதிக்காது தீயணைப்புத் துறையினர் மரத்தின் மீது ஏறி அவர் கழுத்தில் உள்ள துண்டினை கத்தியால் அறுத்து வலையில் விழச்செய்து காப்பாற்றினர்.

அந்த நபரைப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. யார் அந்த நபர்? எதன் காரணமாக மரத்தின் மீது ஏறினார்? என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...