கோவை: தபால் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் 15-ம் தேதி நடக்கிறது.
கோவை: தபால் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் 15-ம் தேதி நடக்கிறது.
கோவையில் உள்ள தபால் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாம் மண்டல அளவிலும் கோட்ட அளவிலும் நடைபெற உள்ளது. மண்டல அளவிலான முகாம் வருகின்ற 15-ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.
3-மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த முகாம் கோவை குட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் 11-மணி முதல் நடைபெறுகிறது. இந்த முகாமிற்கான மனுக்களை 13-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
17-ம்தேதி ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகத்தில் நடைபெறும் கோட்ட அளவிலான முகாமிற்கு நாளை மனுக்களை அனுப்ப வேண்டும். இந்த முகாமில் தபால் துறையில் உள்ள குறைகள் அதிகாரிகள் முன்னிலையில் மக்களுக்குத் தீர்த்து வைக்கப்படும். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளத் தபால் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கோவையில் உள்ள தபால் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்த முகாம் மண்டல அளவிலும் கோட்ட அளவிலும் நடைபெற உள்ளது. மண்டல அளவிலான முகாம் வருகின்ற 15-ம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது.
3-மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த முகாம் கோவை குட்செட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் 11-மணி முதல் நடைபெறுகிறது. இந்த முகாமிற்கான மனுக்களை 13-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
17-ம்தேதி ஆர்.எஸ்.புரம் தபால் அலுவலகத்தில் நடைபெறும் கோட்ட அளவிலான முகாமிற்கு நாளை மனுக்களை அனுப்ப வேண்டும். இந்த முகாமில் தபால் துறையில் உள்ள குறைகள் அதிகாரிகள் முன்னிலையில் மக்களுக்குத் தீர்த்து வைக்கப்படும். இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ளத் தபால் துறை கேட்டுக்கொண்டுள்ளது.