தரம் உயரும் பேரூராட்சிகள் எவை? பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு.!!!

கோவை: பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு14ம் தேதி நடக்கிறது.


கோவை: பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு14ம் தேதி நடக்கிறது.

கருமத்தம் பட்டி, காரமடை, கூடலூர் மற்றும் மதுக்கரை ஆகிய பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

4-பேரூராட்சிகளை 2021-22ம் ஆண்டு வரவு-செலவு திட்டத்தின் நகராட்சி நிர்வாகத் துறையின் மானிய கோரிக்கையின் போது 24.08.2021-ம் அன்று சட்டசபையில், கோவை மாவட்டத்தில் உள்ள கருமத்தம் பட்டி, காரமடை, கூடலூர் மற்றும் மதுக்கரை ஆகிய 4- பேரூராட்சிகளை நகராட்சியாகத் தரம் உயர்த்தி நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.

இதன் தொடர் நடவடிக்கையாகக் கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 14-ம் தேதி அன்று மாலை 4.30-மணியளவில் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், 4-பேரூராட்சிகளை நகராட்சிகளாகத் தரம் உயர்வு செய்வது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.

கருத்துக்களைத் தெரிவிக்க இந்த விளக்கக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட பேரூராட்சியின் முன்னாள் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நகராட்சியாகத் தரம் உயர்வு அடையும் பேரூராட்சி பகுதிக்கு அருகாமையில் உள்ள கிராம ஊராட்சிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் குடியிருப்பு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...