வால்பாறையில் 2 தேயிலை தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்து தேயிலை வாரியம் நடவடிக்கை..!

கோவை: வால்பாறையில் 2 தேயிலை தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்து தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.


கோவை: வால்பாறையில் 2 தேயிலை தொழிற்சாலைகளின் உரிமங்களை ரத்து செய்து தேயிலை வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில் 60க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு பறிக்கப்படும் தேயிலை கொழுந்துகள் 20க்கும் மேற்பட்ட தேயிலைத் தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டு தேயிலை தூளாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள் கோயம்புத்தூர், குன்னூர் மற்றும் கொச்சின் ஆகிய பகுதியில் உள்ள ஏல மையங்களுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் இந்திய தேயிலை வாரியத்தில் பதிவு செய்து, அவர்களுடைய வழிமுறை தரக்கட்டுப்பாடு டன் தேயிலை தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் மற்றும் சோலையாறு எஸ்டேட்டில் செயல்பட்டு வரும் தேயிலை தொழிற்சாலைகள் உரிய அனுமதி பெறாமல் தேயிலை தூளினை மீண்டும் பயன்படுத்தி பாக்கெட்டுகளாக தயார் செய்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் இந்திய தேயிலை வாரிய அதிகாரிகள் ஆய்வின்போது இதை கண்டுபிடித்தனர். இதுபற்றி தேயிலை வாரிய அதிகாரிகள் விளக்கம் கேட்டும் தேயிலைத் தோட்ட நிர்வாகங்கள் உரிய நாட்களுக்குள் விளக்கம் அளிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, இந்திய தேயிலை வாரியம் இந்த இரண்டு தொழிற்சாலைகளுக்கும் இயங்க அனுமதிக்கப்பட்ட உரிமத்தை தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளது.

இதுகுறித்து தேயிலைத் தோட்ட நிர்வாகம் சார்பில் கூறுகையில், இந்திய தேயிலை தோட்ட வாரியத்திற்கு ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் மீட்டிங்கில் பங்கேற்று தெரிவித்துள்ளதாக கூறினர்.

மேலும், உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒரு சில நாட்களில் தொழிற்சாலை இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதன் காரணமாக தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்கள் மாற்றுப் பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...