வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்!

கோவை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.


கோவை: வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு கட்டமாக, வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.



இந்த கருத்தரங்கிற்குத் தலைமையேற்று சிறப்புரையாற்றிய வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், ஆசிரியைகள் மாணவிகள் பெண் சிசுக் கொலையை தடுக்க முன் வரவேண்டும். கருவில் உள்ளது ஆணா, பெண்ணா என்று பார்த்து தகவல் தெரிவிப்பது குற்றமாகும். தங்களுக்கு ஏற்படும் பாலியல் சம்பந்தமான தொல்லைகள் இடையூறுகள் பற்றி தைரியமாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.



மேலும், வரதட்சனை கொடுமை, பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் இடையூறுகள் பற்றிய தகவல் தெரிவிக்க காவல்துறை SOS செயலியை அறிவித்துள்ளது. இதை அனைத்து பெண்களும் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.



மேலும், பெண்கள் மற்றும் பெண் குழந்தைக்கான அவசர உதவி எண் 181 எண்ணையும், 1098 கட்டணமில்லா எண்ணையும் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொண்டார். இந்தக் கருத்தரங்கத்தில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம், பள்ளி தலைமையாசிரியர் சிவநேசன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...