வால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் தேயிலை உற்பத்தி பாதிப்பு - தொழிலாளர்கள் வேதனை..!

கோவை: வால்பாறையில் தொடர் மழை காரணமாக தேயிலை உற்பத்தி பாதிப்படைந்து உள்ளதால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் தொடர் மழை காரணமாக தேயிலை உற்பத்தி பாதிப்படைந்து உள்ளதால் தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலை பயிரிடப்பட்டுள்ளது. தேயிலைத் தோட்டங்களில் சுமார் 50.000க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், இவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு தினசரி 42 கிலோ கொழுந்து பறிக்க வேண்டும், இதற்கு மேல் அதிகப்படியான ஒவ்வொரு கிலோவுக்கும் ரூபாய் நான்கு கிடைக்கும். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் சராசரியாக ரூபாய் 150 வரை அதிகப்படியான ஊதியம் பெறுவர்.

ஆனால், தற்போது வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக தொடர் மழை பெய்து வருவதால் தேயிலை செடியின் கொழுந்து உற்பத்தி மிகவும் குறைந்து உள்ளது. தற்போது சராசரியாக 20 கிலோ தேயிலை கொழுந்து மட்டும் பறித்து வருகின்றனர்.

இதன் காரணமாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் மாதம் சராசரியாக ரூபாய் 5000 இழப்பு ஏற்படுகிறது. இதேபோல், தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய குறைவு ஏற்படுவதால் வருவாய் இழப்பீடு காரணமாக தொழிலாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...