கோவையில் விளையாட்டு மாரியம்மன் கோவிலில் விளையாட்டு காட்டிய திருடர்கள்: 3-பேரை வளைத்து பிடித்த போலீஸார்.!!!

கோவை: கடந்த 2-நாட்களுக்கு முன்பு விவேகானந்தா நகரில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயிலில் புகுந்து திருடிய மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கடந்த 2-நாட்களுக்கு முன்பு விவேகானந்தா நகரில் உள்ள விளையாட்டு மாரியம்மன் கோயிலில் புகுந்து திருடிய மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை சிங்காநல்லூர் அருகே விவேகானந்தா நகரில் விளையாட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலில் இரவு பூஜை முடிந்ததும் தர்மகர்த்தா கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் காலையில் கோவிலை திறப்பதற்காக வந்தார்.

ஆனால், கோவில் கதவில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே கோவில் உள்ளே சென்று பார்த்தார். அங்கு அம்மன் கழுத்திலிருந்த தங்க சங்கிலி, லட்சுமி உருவம் பொறித்த தங்க காசு, பொட்டுத்தாலி, உட்பட 2-சவரன் தங்க நகைகள் மாயமானது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் சுற்றி திரிந்த 3-பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் நகைகளை திருடியது உறுதியானது. மேலும் போலீஸ் விசாரணையில் அவர்கள் பெரியகுளத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், விஜய், மற்றும் மாரிராஜன் என்பது தெரியவந்தது. அவர்களை போலிசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...