நீரில் சிக்கியவர்களைக் காப்பது எப்படி? கோவையில் பேரிடர் மீட்புக்குழுவினருக்கு பயிற்சி!

மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்கள் மற்றும் தெரியாமல் குளத்தில் சிக்கித்தவிப்பவர்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்து தீயணைப்புத்துறை சார்பில் கோவையில் பேரிடர் மீட்புக்குழு போலீசாருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.


கோவை: இயற்கை பேரிடர் காலங்களில் மக்களைக் காப்பதில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பேரிடர் மீட்புக்குழுவினர்.

குறிப்பாக மழை, வெள்ளம் போன்ற அசாதாரணக் காலங்களிலும் பொதுமக்களைக்காப்பதில் இவர்களின் பங்கு அளப்பெரிதாக உள்ளது. இவர்களுக்கு அவ்வப்போது இதுப்போன்ற சூழ்நிலையில் மக்களை காக்கும் வழமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம். இந்த வகையில் தமிழக பேரிடர் மீட்புக்குழுவினர் சென்னையிலிருந்து 60 பேர் இன்று கோவை வந்திருந்தனர். இந்த வேளையில் இன்று கோவை பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்புக்குழுவினருக்கு பயிற்சியை வழங்கினர்.

இதன் ஒரு பகுதியாக கோவை குறிச்சி குளத்தில் நீரில் அடித்துச்செல்லப்பட்டு, உயிருக்கு தத்தளிப்பவர்களை எப்படி பாதுகாப்போடு மீட்க வேண்டும்? என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மீட்புக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில், தீயணைப்பு துறை வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...