சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் வாங்கியக் கடன்களை திரும்பப்பெறுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை மத்திய அமைச்சருக்கு எம்எஸ்எம்இ ஒருங்கிணைப்பு குழு அனுப்பியுள்ளது.
கோவை: நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மற்றும் நிகர மேம்பாட்டிற்கு சிறு, குறு மற்றும் நடுத்த தொழில்நிறுவனங்கள் உலகளவில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
குறிப்பாக குறைந்த மூலதனத்தில் அதிகப்படியான லாபத்தைப் பெறுவதே இந்நிறுவனங்கள் நோக்கமாகக்கொண்டுள்ளது. மேலும் பலருக்கு வேலைவாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது. தமிழகத்தைப்பொறுத்தவரை மின மற்றும் மின்னணு பொருட்கள், தோல் மற்றும் தோல் பொருட்கள், உதிரி பாகங்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், ஆயுத்த ஆடை உற்பத்தி போன்ற 13 க்கும் மேற்பட்டவை சிறு,குறு தொழில்நிறுவனங்களுக்கு கீழ் வருகின்றது. இந்நிறுவனங்கள் அனைத்திற்கும் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு அரசின் சார்பில் கடன் உதவி வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தான், கோயம்புத்தூரின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சார்ந்த அமைப்புகளுக்கான ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், கடன்தொகை மறுசீரமைப்பின் போது தற்போது உள்ள வரையறையான 5௦ கோடி ரூபாய் என்பது உயர்த்தப்பட்டு 100 கோடி ரூபாய் வரை வழங்கப்பட வேண்டும், கடன்தொகை கட்டுவதற்கான கால நீட்டிப்பு வசதி தற்போதுள்ள 31, மார்ச் 2021 என்பது 3௦ செப்டம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட வேண்டும் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயன் தரும் வகையில் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக்கோரிக்கைகள் அனைத்தும் கோயம்புத்தூர் தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு சார்பாக மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாண்புமிகு மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர்நாராயண் டாட்டு ரானே மற்றும் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் மேம்பாட்டு ஆணையர் திரு.தேவேந்திரகுமார் சிங், ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக குறைந்த மூலதனத்தில் அதிகப்படியான லாபத்தைப் பெறுவதே இந்நிறுவனங்கள் நோக்கமாகக்கொண்டுள்ளது. மேலும் பலருக்கு வேலைவாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கப்பெறுகிறது. தமிழகத்தைப்பொறுத்தவரை மின மற்றும் மின்னணு பொருட்கள், தோல் மற்றும் தோல் பொருட்கள், உதிரி பாகங்கள், தங்கம் மற்றும் வைர நகைகள், ஆயுத்த ஆடை உற்பத்தி போன்ற 13 க்கும் மேற்பட்டவை சிறு,குறு தொழில்நிறுவனங்களுக்கு கீழ் வருகின்றது. இந்நிறுவனங்கள் அனைத்திற்கும் தொழிற்சாலைகளை நடத்துவதற்கு அரசின் சார்பில் கடன் உதவி வழங்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தான், கோயம்புத்தூரின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சார்ந்த அமைப்புகளுக்கான ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் மத்திய அமைச்சருக்கு கோரிக்கை மனு ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அதில், கடன்தொகை மறுசீரமைப்பின் போது தற்போது உள்ள வரையறையான 5௦ கோடி ரூபாய் என்பது உயர்த்தப்பட்டு 100 கோடி ரூபாய் வரை வழங்கப்பட வேண்டும், கடன்தொகை கட்டுவதற்கான கால நீட்டிப்பு வசதி தற்போதுள்ள 31, மார்ச் 2021 என்பது 3௦ செப்டம்பர் 2022 வரை நீட்டிக்கப்பட வேண்டும் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பயன் தரும் வகையில் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தக்கோரிக்கைகள் அனைத்தும் கோயம்புத்தூர் தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு சார்பாக மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மாண்புமிகு மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர்நாராயண் டாட்டு ரானே மற்றும் மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் கூடுதல் செயலாளர் மற்றும் மேம்பாட்டு ஆணையர் திரு.தேவேந்திரகுமார் சிங், ஆகியோரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.