Exclusive: கோவை - ஷார்ஜா இடையே இந்த மாதம் முதல் வாரத்தில் 4 முறை விமானங்கள் இயக்கம்.!!!

கோவை: கோவை - ஷார்ஜா இடையே இந்த மாதம் முதல் வாரத்தில் 4-முறை விமானங்கள் இயக்கப்படும் என ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.


கோவை: கோவை - ஷார்ஜா இடையே இந்த மாதம் முதல் வாரத்தில் 4-முறை விமானங்கள் இயக்கப்படும் என ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், ஷார்ஜா மற்றும் இலங்கைக்குச் சர்வதேச பிரிவில் விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் சர்வதேச பிரிவில் தற்பொழுது கோவை - ஷார்ஜா இடையே மட்டும் 'ஏர் அரேபியா' ஏர்லைன்ஸ் சார்பில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் வரை வாரம் மூன்று முறை வீதம் வழங்கப்பட்டு வந்த இந்த சர்வீஸ், செப்டம்பர் 1 முதல் வாரத்தில் நான்கு நாட்கள் கோவை - ஷார்ஜா இடையே விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறுகையில், "கோவை - ஷார்ஜா இடையே இயக்கப்படும் விமானத்தில் 'ஏர் அரேபியா' விமானத்தில் 160 பேர் பயணிக்க முடியும்.

இந்த விமானம் ஒவ்வொரு முறையும் 150க்கும் மேற்பட்ட பயணிகளுடன் செல்கிறது. தவிர ஒவ்வொரு முறையும் குறைந்தபட்சம் 2.5 டன் ௭டையிலான கார்கோ இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுகிறது.

காய்கறிகள், பூக்கள், ஆட்டோமொபைல் உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட பொருட்கள் அதிகம் புக்கிங் செய்யப்பட்டு இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்த மாதம் முதல் இனி வாரத்தில் நான்கு நாட்கள் சர்வீஸ் வழங்கப்படும்." இவ்வாறு ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...