பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு கல்லூரி மாணவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை.!!

கோவை: பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு கல்லூரி மாணவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: பொள்ளாச்சியில் பள்ளி மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து அரசு கல்லூரி மாணவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று குறைந்ததைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க அரசு அனுமதி அளித்தது.

பள்ளி, கல்லூரிகள் திறந்து செயல்பட்டு வரும் நிலையில், பொள்ளாச்சியில் நேற்று, நான்கு பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை அடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கும் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகள் சார்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இன்று நடைபெற்ற பரிசோதனை முகாமில் 300-மாணவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உள்ளது.

சோதனை முடிவுகள் நாளை தெரியப்படுத்தப்படும் என்று சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்குத் தொற்று ஏற்பட்டு வருவது அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...