ஐஸ் கட்டியில் முட்டி.. கையில் நெருப்பு.. தலையில் தீ கரகம்.. கண்ணில் பிளேட.. கலக்கும் கோவை கல்லூரி மாணவி.!! பொதுமக்கள் ஆச்சரியம்.!!

கோவை: கோவையில் கண்களில் கூர்மையான பிளேடுகளுடன், ஐஸ் கட்டி மீது கால் முட்டிகளை வளைத்து நின்றபடி, தலையில் தீக்கரகம், இரு கைகளில் நெருப்பு சிலம்பத்தைத் தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை செய்து அசத்திய மாணவி.


கோவை: கோவையில் கண்களில் கூர்மையான பிளேடுகளுடன், ஐஸ் கட்டி மீது கால் முட்டிகளை வளைத்து நின்றபடி, தலையில் தீக்கரகம், இரு கைகளில் நெருப்பு சிலம்பத்தைத் தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை செய்து அசத்திய மாணவி.

கோவை செலக்கரசல் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, மோனிஷா.வீராசாமி, ஜெயந்தி தம்பதியரின் மகளான, இவர் கிராமிய கலைகள் மீது உள்ள ஆர்வத்தால், அதே பகுதியில் வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளியில் முறையாக சிலம்பம் பயின்று வருகிறார்.



இந்நிலையில், சிலம்பம் சுற்றுவதில், உலக சாதனை புரிய விரும்பிய மாணவி மோனிஷா. தனது கடுமையான பயிற்சியால், செலக்கரசல் கிராம மக்கள் முன்னிலையில் மாணவி மோனிஷா ஐஸ் கட்டி மீது தனது கால்களை முட்டி போட்டபடி, நின்று தலையில் தீக்கரகம், கண்களில் கூர்மையான பிளேடுகளுடன், தனது இரு கைகளில் நெருப்பு சிலம்பத்தைத் தொடர்ந்து பதினைந்து நிமிடங்கள் சுற்றி உலக சாதனை படைத்தார்.



தற்காப்பு கலை மற்றும் கிராமிய கலைகளை இணைத்து செய்த, இவரது இந்த சாதனை பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. உலக சாதனை படைத்த சாதனை மாணவிக்கு வீரத்தமிழன் சிலம்பம் பயிற்சி பள்ளியின் நிறுவன தலைவரும், கலை பண்பாட்டு பிரிவின் தீர்ப்பாளரும் ஆன டாக்டர் கனகராஜ் மற்றும் கிராமிய புதல்வன் அகாடமியின் நிறுவனர் டாக்டர் கலையரசன் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...