கோவை கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்..!

கோவை: கோவை கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவை தமிழகத்தில் கொண்டாட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

ஆனால், விநாயகர் சதுர்த்தி விழா நாளில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட இந்து அமைப்புகள் கோரிக்கை வைத்து போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



வருகிற 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் தடையை மீறி பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டால் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், பொதுமக்கள் வீடுகளில் சிலை வைத்தால் அவர்கள் நீர்நிலைகளில் கரைக்க தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...