கோவை சின்னியம்பாளையம் சாலையில் கோர விபத்து...! உடல் சிதைந்து பெண் பலி.!!

கோவை: கோவையில் இன்று காலை சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அந்தப் பெண் மீது ஏறியதால் உடல் சிதைந்து பரிதாபமாக இறந்தார்.


கோவை: கோவையில் இன்று காலை சாலையைக் கடக்க முயன்ற ஒரு பெண் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாகனங்கள் அந்தப் பெண் மீது ஏறியதால் உடல் சிதைந்து பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவை பீளமேடு அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் இன்று காலை ஒரு பெண்ணின் உடல் சாலையில் சிதைந்த நிலையில் கிடந்தது.

கிழக்கு போக்குவரத்து புலனாய்வு காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண்ணிற்கு 50-வயது இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால் அவர் யார் எனத் தெரியவில்லை. அவர் அந்தப் பகுதியில் நடந்து சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது தெரியவந்தது.

போக்குவரத்து புலனாய்வு காவல்துறை வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...