வாகனம் மோதி உயிரிழந்த அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்த கிணத்துக்கடவு காவல் நிலைய காவலருக்கு மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.!!

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கிட்ஸ் பார்க் பள்ளி அருகே கடந்த 2-ஆம் தேதி இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரத்தில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே கிட்ஸ் பார்க் பள்ளி அருகே கடந்த 2-ஆம் தேதி இரவு நேரத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரத்தில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தார்.

மூதாட்டியின் உடலை மீட்ட கிணத்துக்கடவு காவல்துறையினர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த மூதாட்டிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத காரணத்தால் பிரேதப் பரிசோதனை முடிக்கப்பட்டு கிணத்துக்கடவு காவல் நிலைய காவலர் செல்வகுமார் மூதாட்டியின் உடலுக்குப் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்தார்.

காவலர் செல்வகுமாரின் இந்த மனிதநேய செயலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கண்டு, காவலர் செல்வகுமாரை நேரில் அழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இதேபோல், செல்வகுமாரின் மனிதநேயத்தை கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், உதவி ஆய்வாளர் கணேசமூர்த்தி, அருள் பிரகாஷ் உள்ளிட்ட காவலர்கள் பாராட்டினர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...