'ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்'- ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழா.. மாவட்ட ஆட்சியர் வினீத் துவக்கி வைப்பு.!!!

திருப்பூர்: தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் வினீத் துவக்கி வைத்தார்.


திருப்பூர்: தேசிய ஊட்டச்சத்து மாத விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் வினீத் துவக்கி வைத்தார்.

கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் ஒரு சிறப்புத் தலைப்பில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த வருடம் செப்டம்பர் 2021-மாதத்தில் “ஆரோக்கியமான வாழ்வை நோக்கி ஒருங்கிணைந்த பயணம்” என்ற தலைப்பில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ள குழந்தைகளைக் கண்டறிதல் "வீட்டுத் தோட்டம் அமைப்பதை ஊக்குவித்தல்" என்ற இரு கருத்துகளை கொண்டு ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஏற்பாடு செய்யப்பட்ட ஊட்டச்சத்து கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத்திருவிழாவை மாவட்ட ஆட்சியர் வினீத் துவங்கி வைத்தார்.

இக்கண்காட்சியில், பாரம்பரிய சிறுதானியங்கள் கொண்டு 50-உணவு வகைகள், அங்கன்வாடி மையங்களில் வழங்கப்படும் இணை உணவு மாவு கொண்டு செய்யப்பட்ட 50-உணவு வகைகள் என மொத்தம் 100-உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகப் பாரம்பரிய உணவு வகைகளுக்கான செயல்முறை கையேடு மற்றும் ஊட்டச்சத்து நிலைக்கு வாழ்க்கை சுழற்சி அணுகுமுறை குறித்த துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...