கோவை :கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார்தாரரின் கருத்துக்கேட்பு பெட்டி வைக்கப்பட்டது.
கோவை :கோவை மாவட்ட எஸ்.பி. செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார்தாரரின் கருத்துக்கேட்பு பெட்டி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் தரும் நபர்களுக்கு காவல்துறை திருப்திகரமான பணிகள் செய்து தருகிறார்களா? என்பதைப் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், காவல்நிலையங்களில் கருத்துக் கேட்பு பெட்டி வைக்கக் கோவை மாவட்ட எஸ்.பி.,செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார்தாரரின் கருத்துக்கேட்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதில் காவல் நிலையத்திற்குப் புகார் தர வரும் நபர்கள் மற்றும் வழக்கு சம்பந்தமாக காவல்துறை நடந்துகொள்ளும் விதங்கள் குறித்தும், காவலர்களின் பணிகள் திருப்திகரமாக இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்தும் கருத்துக் கேட்பு பெட்டியில் செலுத்த ஏதுவாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கேட்பு பெட்டி மாதம் ஒருமுறை திறக்கப்பட்டு எஸ்.பி.,செல்வநாகரத்தினம் மேற்பார்வையில் புகார்தாரரின் கருத்துகளை ஆராயப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் தரும் நபர்களுக்கு காவல்துறை திருப்திகரமான பணிகள் செய்து தருகிறார்களா? என்பதைப் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கும் வகையில், காவல்நிலையங்களில் கருத்துக் கேட்பு பெட்டி வைக்கக் கோவை மாவட்ட எஸ்.பி.,செல்வ நாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார்தாரரின் கருத்துக்கேட்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதில் காவல் நிலையத்திற்குப் புகார் தர வரும் நபர்கள் மற்றும் வழக்கு சம்பந்தமாக காவல்துறை நடந்துகொள்ளும் விதங்கள் குறித்தும், காவலர்களின் பணிகள் திருப்திகரமாக இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்தும் கருத்துக் கேட்பு பெட்டியில் செலுத்த ஏதுவாக வைக்கப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கேட்பு பெட்டி மாதம் ஒருமுறை திறக்கப்பட்டு எஸ்.பி.,செல்வநாகரத்தினம் மேற்பார்வையில் புகார்தாரரின் கருத்துகளை ஆராயப்படும் என்று காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.