பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது - பாலக்காடு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

கோவை: பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது. 3 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. பாலக்காடு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சியை அடுத்த பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டியது. 3 மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. பாலக்காடு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடந்த சில தினங்களாக பருவமழை தீவிரமடைந்து பெய்து வருகிறது. இதனால், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் உள்ள தொகுப்பு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

இன்றைய நிலவரப்படி, சோலையார் அணை 161.29 அடியை எட்டியுள்ளது.



ஆழியார் அணை 118.95 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில், 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2,352 கன அடியாக உயர்ந்தது. இதனால், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.



இதனைத்தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில், மூன்று மதகுகள் வழியாக உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. மதகுகள் வழியாகவும், காண்டூர் கால்வாய் வழியாகவும், விநாடிக்கு 2,085 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்திலுள்ள கரையோர கிராமங்களுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...