கோவை: கோவையில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் வாடகை கேட்ட வீட்டு உரிமையாளரை சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் கோல்டன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் என்பவரின் மகன் ராமமூர்த்தி (45). இவரது வீட்டில் ஜேக்கப் என்பவரின் மகன் மணிகண்டன் (21) என்பவர் குடியிருந்து வருகிறார்.
மணிகண்டன் கடந்த 11 மாதங்களாக வீட்டிற்கு வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை ராமமூர்த்தி கேட்டும் மணிகண்டன் சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராமமூர்த்தி மணிகண்டனிடம் பாக்கி உள்ள வாடகை தொகையை கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது, மணிகண்டன் குடிபோதையில் இருந்துள்ளார்.
இதையடுத்து, மணிகண்டன் வீட்டு உரிமையாளர் ராமமூர்த்தியை ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு தாக்கியுள்ளார்.
மேலும், தகராறு முற்றவே வீட்டு உரிமையாளர் ராமமூர்த்தியை மணிகண்டன் கத்தியால் குத்த முயன்றார். அப்போது, தடுக்க முயன்ற ராமமூர்த்திக்கு கைகளில் கத்திக்குத்து விழுந்தது.
இதில் காயமடைந்த ராமமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து ராமமூர்த்தி செல்வபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் கோல்டன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பெருமாள் என்பவரின் மகன் ராமமூர்த்தி (45). இவரது வீட்டில் ஜேக்கப் என்பவரின் மகன் மணிகண்டன் (21) என்பவர் குடியிருந்து வருகிறார்.
மணிகண்டன் கடந்த 11 மாதங்களாக வீட்டிற்கு வாடகை தரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து பலமுறை ராமமூர்த்தி கேட்டும் மணிகண்டன் சரியான பதில் அளிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில், ராமமூர்த்தி மணிகண்டனிடம் பாக்கி உள்ள வாடகை தொகையை கொடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது, மணிகண்டன் குடிபோதையில் இருந்துள்ளார்.
இதையடுத்து, மணிகண்டன் வீட்டு உரிமையாளர் ராமமூர்த்தியை ஆபாச வார்த்தைகளால் பேசியதோடு தாக்கியுள்ளார்.
மேலும், தகராறு முற்றவே வீட்டு உரிமையாளர் ராமமூர்த்தியை மணிகண்டன் கத்தியால் குத்த முயன்றார். அப்போது, தடுக்க முயன்ற ராமமூர்த்திக்கு கைகளில் கத்திக்குத்து விழுந்தது.
இதில் காயமடைந்த ராமமூர்த்தியை அருகில் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
தொடர்ந்து ராமமூர்த்தி செல்வபுரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.