கோவை: நான்கு மாதங்கள் கழித்து இன்று மீண்டும் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குக் காலை 7:10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கோவை: நான்கு மாதங்கள் கழித்து இன்று மீண்டும் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்குக் காலை 7:10 மணிக்கு மலை ரயில் புறப்பட்டுச் சென்றதால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகையும், பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் தேயிலை எஸ்டேட்டுகளை மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கண்டு ரசித்து சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
130-ஆண்டுக்கு மேல் பழமைவாய்ந்த மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு காரணமாக மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஊரடங்கு தளர்வு காரணமாக இடையே இடையே மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது கொரோனா அலை பரவல் காரணமாக 21.4.21ஆம் தேதி முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொரோனா 2-வது அலைபரவல் குறைந்தது காரணமாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கும் என்று அறிவிப்பு செய்தது.
இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று தொடங்கியது. காலை முதலே மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை7. 10 மணிக்கு அழகிய மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மலை ரயிலில் வெளிநாடு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அழகையும், பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து கண்களுக்குக் குளிர்ச்சியைத் தரும் தேயிலை எஸ்டேட்டுகளை மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் கண்டு ரசித்து சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
130-ஆண்டுக்கு மேல் பழமைவாய்ந்த மலை ரயிலை யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கடந்த ஆண்டு மத்திய மாநில அரசுகளின் ஊரடங்கு காரணமாக மலை ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஊரடங்கு தளர்வு காரணமாக இடையே இடையே மலை ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது கொரோனா அலை பரவல் காரணமாக 21.4.21ஆம் தேதி முதல் மீண்டும் மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கொரோனா 2-வது அலைபரவல் குறைந்தது காரணமாகச் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம் ஊட்டி இடையே மலை ரயில் சேவை இன்று முதல் தொடங்கும் என்று அறிவிப்பு செய்தது.
இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் சேவை இன்று தொடங்கியது. காலை முதலே மலை ரயிலில் பயணம் செய்ய சுற்றுலாப்பயணிகள் வந்த வண்ணம் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் காலை7. 10 மணிக்கு அழகிய மலை ரயில் புறப்பட்டுச் சென்றது. சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.