இது காட்டுப்பகுதி அல்ல, நம்ம கோவை டெஸ்டூல் பாலம்..! எல்.இ.டி மின் விளக்குகள் எரியததால்  விபத்தில் சிக்கும் பொதுமக்கள்.

கோவை: கடந்த மூன்று நாட்களாக கோவை டெக்ஸ்டூல் பாலத்தில் இருக்கக்கூடிய எல்.இ.டி மின் விளக்குகள் எரியாததால், பொதுமக்கள் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள டிவைடரில் மோதி கீழே விழுந்து எழுந்து செல்லும் காட்சி அரங்கேறி வருகிறது.


கோவை:இங்கே படத்தில் பார்க்க கூடிய காட்சிகள் அடர்ந்த காட்டுப் பகுதிக்கு செல்லும் வழி அல்ல. இதுகோவையின் மைய பகுதியான டெக்ஸ்டைல் பாலம் ஆகும். 

கடந்த மூன்று நாட்களாக டெக்ஸ்டூல் பாலத்தில் இருக்கக்கூடிய எல்.இ.டி மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் பாலத்தின் மையப்பகுதியில் உள்ள டிவைடரில் மோதி கீழே விழுந்து எழுந்து செல்லும் காட்சி அரங்கேறி வருகிறது. 



கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சத்தியமங்கலம் சாலையின் மைய பகுதியில் அமைந்துள்ளது டெக்ஸ்டூல் பாலம். இங்கு மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை அரசு ஊழியர்கள்,தனியார் நிறுவனத்தில் வேலை செய்யக் கூடியவர்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அன்னூர், கோவில்பாளையம், சரவணம்பட்டி, கணபதி மணியகாரம்பாளையம் உட்பட பல்வேறு இடங்களுக்கு இந்த சாலையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற தனியார் நிறுவனங்களான எல்.எம்.டபில்யூ (LMW), ரூட்ஸ் உட்பட பல்வேறு தனியார் நிறுவனங்களும் இப்பகுதிதியில் செல்லப்பட்டு வருகின்றனர். சுமார், 5ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்த்துவருகின்றனர். மேலும், சிறு குறு தொழில் .தொழில் முனைவோர்கள் என தினசரி இப்பாலத்தை பல்வேறு தரப்பு மக்கள் கடந்து சென்றாக வேண்டும். 



இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதி, கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இப்போது வரை இருளில் மூழ்கியுள்ளது. அப்பாலத்தில், பொருத்தப்பட்டுள்ள 20 -க்கும் மேற்பட்ட அதிக ஒளி பொருந்திய எல்.இ.டி விளக்குகள் முழுமையாக எரியாததே இதற்கு காரணம்.இதனால் அப்பகுதியில் வரும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் விபத்துக்குள்ளாகும் அவல நிலை ஏற்ப்பட்டுள்ளது. 

பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், எதோ வனப்பகுதிக்குள் செல்லக்கூடிய உணர்வு ஏற்படுவதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே, இனியும் தாமதிக்காமல் சமந்தப்பட்ட மின்சார வாரிய அலுவலர்கள் இருட்டில் மூழ்கியுள்ள இந்த பாலத்தில் உள்ள மின்விளக்குகளை உடனே எரிய செய்ய வேண்டும், என்றுபொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...