கோவை: கோவை மாநகர் காவல் துறை சார்பாக இன்று பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 2.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
கோவை: கோவை மாநகர் காவல் துறை சார்பாக இன்று பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. 200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கூறியிருப்பதாவது -
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப. அவர்களின் உத்தரவின் பேரில் மதுக்கரை மற்றும் சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சட்டத்திற்கு விரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த 6 நபர்களை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 2.2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து மேற்படி நபர்களை சிறையில் அடைத்தனர்.
இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இது போன்ற சட்டவிரோத செயல்கள் குறித்து தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.