கோவை: கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் போலீசார் சோதனை மேற்கொண்டதில் 28 பேர் மது மற்றும் புகையிலை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்ட காவல் துறைக்கு உட்பட்ட பகுதியில் இன்று ஒரு நாள் மட்டும் போலீசார் சோதனை மேற்கொண்டதில், 28 பேர் மது மற்றும் புகையிலையை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்ததற்காகது கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், கோவை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 21 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 186 மது பாட்டில்கள் மற்றும் 45 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதே போல், கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 7 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1.18 கிலோ கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 770810100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும், என்று உறுதியளித்துள்ளார்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில், கோவை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 21 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 186 மது பாட்டில்கள் மற்றும் 45 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
அதே போல், கோவை மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சட்டத்திற்கு விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 7 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 1.18 கிலோ கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 9498181212 மற்றும் வாட்ஸ்அப் எண் 770810100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும், என்று உறுதியளித்துள்ளார்.