திருப்பூர்: திருப்பூரில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
திருப்பூர்: திருப்பூரில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் நடந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான ஓவியப் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது. அதில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு போட்டியாளரும் சிறப்பான முறையில் ஓவியங்கள் வரைந்து அனுப்பியிருந்தனர். இதில் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றாற்போல் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி ஆகிய நான்கு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு சுற்றுலாத்துறையின் சார்பாக சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை புரிந்திருந்தனர். திருப்பூர் மாவட்ட சுற்றுலா தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் த.அரவிந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கியதுடன் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தனித்துவம் தொடர்பான தகவல்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் இவ்விழாவில் திருப்பூர் டாக்ஸ் MKM கணேஷ் மற்றும் மகாசக்தி அறக்கட்டளை தலைவர் குளோபல் பூபதி மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் த. செல்வராஜு ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான ஓவியப் போட்டி இணையவழியில் நடத்தப்பட்டது. அதில் 250க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு போட்டியாளரும் சிறப்பான முறையில் ஓவியங்கள் வரைந்து அனுப்பியிருந்தனர். இதில் ஒவ்வொரு வயதினருக்கும் ஏற்றாற்போல் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, கல்லூரி ஆகிய நான்கு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக ஓவியம் வரைந்தவர்களுக்கு சுற்றுலாத்துறையின் சார்பாக சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் வருகை புரிந்திருந்தனர். திருப்பூர் மாவட்ட சுற்றுலா தன்னார்வலர்களும் கலந்து கொண்டனர். இவ்விழாவில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா அலுவலர் த.அரவிந்தகுமார் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கியதுடன் அரசு வேலைவாய்ப்பு மற்றும் தனித்துவம் தொடர்பான தகவல்களை எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் இவ்விழாவில் திருப்பூர் டாக்ஸ் MKM கணேஷ் மற்றும் மகாசக்தி அறக்கட்டளை தலைவர் குளோபல் பூபதி மற்றும் உதவி சுற்றுலா அலுவலர் த. செல்வராஜு ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.