வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலைகள் வைத்து வழிபடுவது குறித்து ஆலோசனை கூட்டம்!

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலைகள் வைத்து வழிபடுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலைகள் வைத்து வழிபடுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு வால்பாறை தலைமையிடத்துத் துணை வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் முன்னிலை வகித்தார்.

கொரானா தொற்றின் காரணமாக மத சார்பான ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக பொது இடங்களில் சிலைகளை நிறுவுவது அல்லது பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

அதேசமயம், சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதற்கும் நீர்நிலையில் கரைப்பதற்கு அனுமதி இல்லாத நிலையில், பொதுமக்கள் தங்களது இல்லங்களிலேயே கொண்டாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. தனி நபர்கள் தங்களது இல்லங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாகச் சென்று அருகில் உள்ள நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் இந்து முன்னணி நகர பொதுச் செயலாளர் சேகர், ஜெயன், சுந்தர்ராஜ், பிரஸ் பாலன், பாரத் சேனா அமைப்பின் சார்பில் அன்பழகன், செல்வகுமார் உட்பட ஏராளமான அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...