சமையல் காஸ் சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி திருப்பூரில் மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டரை பாடை கட்டி எடுத்து வந்து போராட்டம்!

திருப்பூர்: சமையல் காஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டரை பாடை கட்டி எடுத்து வந்தும், விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: சமையல் காஸ் சிலிண்டர் விலையை உடனடியாக குறைக்க வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிலிண்டரை பாடை கட்டி எடுத்து வந்தும், விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை அனுசரித்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் அல்லது மாதத்திற்கு இருமுறை சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி வருகின்றன.

அந்த வகையில் கடந்த 1-ந் தேதி சமையல் கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.25 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் சிலிண்டர் விலை ரூ.900-ஐ தாண்டி இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடந்த 2014ம் ஆண்டு ரூ.410-க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் தற்போது 7 ஆண்டுகளில் 125 சதவீதம் விலை உயர்ந்து ரூ.900-ஐ தாண்டி உள்ளது. மானியமும் பெயரளவில் தான் உள்ளது. இதனால் சாமானிய, நடுத்தர மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனால் சமையல் கேஸ் விலையை உயர்த்திய ஒன்றிய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு சிலிண்டர் விலையை குறைக்க வலியுறுத்தி சிலிண்டரை பாடைகட்டி எடுத்து வந்து விறகு அடுப்பில் சமைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சுமார் 30க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...