கோவை: கோவை மாவட்டம் முழுவதும் சூதாட்டம் மது பாட்டில்கள், சேவல் சண்டை, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 33-பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் சூதாட்டம் மது பாட்டில்கள், சேவல் சண்டை, குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட 33-பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆணையின் பேரில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கக் காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 27 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 130 மது பாட்டில்கள் மற்றும் 73 லிட்டர் கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக 2 சேவல்களை வைத்து சூதாட்டம் விளையாடிய செல்வராஜ் மற்றும் நந்தகுமார் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 2 சேவல் மற்றும் ரூபாய் 200/- பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தாமோதரன் மற்றும் லெனின் ஆகியோர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்த வசந்த், தினேஷ், முகம்மது அப்பாஸ் மற்றும் கார்த்தி ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 3380/-,வண்டி-1, மற்றும் கைபேசி-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை-7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் ஆணையின் பேரில் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், மதுவிலக்கு அமலாக்கக் காவல்துறையினர் மற்றும் உட்கோட்ட காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்டத்திற்கு விரோதமாக மது விற்பனை செய்த 27 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 130 மது பாட்டில்கள் மற்றும் 73 லிட்டர் கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக 2 சேவல்களை வைத்து சூதாட்டம் விளையாடிய செல்வராஜ் மற்றும் நந்தகுமார் ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 2 சேவல் மற்றும் ரூபாய் 200/- பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் தாமோதரன் மற்றும் லெனின் ஆகியோர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டத்திற்கு விரோதமாக லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்த வசந்த், தினேஷ், முகம்மது அப்பாஸ் மற்றும் கார்த்தி ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 3380/-,வண்டி-1, மற்றும் கைபேசி-1 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் பற்றிய தகவலை-7708100100 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்குத் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியங்கள் காக்கப்படும்.