கோவை எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்தவர் பலி - போலீசார் விசாரணை!

கோவை: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியில் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்து கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து இறந்து கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்தவர் அழகர்சாமி (66). இவர் கடந்த 8 வருடமாக எஸ்என்எஸ் பொறியியல் கல்லூரியில் குடிநீர் சுத்திகரிப்பு ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், இவர் நேற்று மாலை கல்லூரி வளாகத்தில் தனது மனைவியின் தங்கை கணவரான உதயசூரியன் என்பவருடன் சேர்ந்து கழிவுநீரை சுத்திகரிக்கும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, சுத்தம் செய்வதற்காக ஒரு தொட்டிக்குள் அழகர்சாமி இறங்கினார். மற்றொரு தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப உதயசூரியன் சென்றார். சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது தொட்டியில் அழகர்சாமி சடலமாக மிதந்தார்.

இதுகுறித்து உதயசூரியன் அளித்த புகாரின் பேரில் கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாரடைப்பா அல்லது விஷவாயு தாக்கி இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...