திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் இடிந்து விழுந்து சேதம் அடைந்ததில், பாரில் குடிக்க அனுமதி இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பபட்டது.
திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் இடிந்து விழுந்து சேதம் அடைந்ததில், பாரில் குடிக்க அனுமதி இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பபட்டது.
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை(2262) செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அருகே குமார் என்பவருக்கு சொந்தமான பார்(மதுபானகூடம்) செயல்பட்டு வருகிறது.
கொரோன நோய் தொற்று காரணமாகத் தமிழக அரசு டாஸ்மாக் பார்கள் இயங்குவதற்குத் தடை விதித்துள்ளது. இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று மதியம் தென்னம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையை அருகே உள்ள டாஸ்மாக் பாரின் மேற்கூரை கனமழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்தது.

டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பாரின் மேற்கூரையானது மரத்தால் செய்யப்பட்டு ஓடுகளால் வேயப்பட்டிருந்தது.
நீண்ட நாட்களாகச் செயல்படாமல் பராமரிப்பின்றி இருந்ததால் கனமழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பாரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், சமையல் உபகரணங்கள், குளிர்பானங்கள் ஆகியவை சேதமடைந்தது.
பாரில் மது அருந்த தமிழக அரசு தடை விதித்திருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை(2262) செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடை அருகே குமார் என்பவருக்கு சொந்தமான பார்(மதுபானகூடம்) செயல்பட்டு வருகிறது.
கொரோன நோய் தொற்று காரணமாகத் தமிழக அரசு டாஸ்மாக் பார்கள் இயங்குவதற்குத் தடை விதித்துள்ளது. இதனிடையே திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், இன்று மதியம் தென்னம்பாளையம் பகுதியில் டாஸ்மாக் கடையை அருகே உள்ள டாஸ்மாக் பாரின் மேற்கூரை கனமழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்தது.
டாஸ்மாக் கடைக்கு மது வாங்க வந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பாரின் மேற்கூரையானது மரத்தால் செய்யப்பட்டு ஓடுகளால் வேயப்பட்டிருந்தது.
நீண்ட நாட்களாகச் செயல்படாமல் பராமரிப்பின்றி இருந்ததால் கனமழைக்குத் தாங்காமல் இடிந்து விழுந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் பாரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ், சமையல் உபகரணங்கள், குளிர்பானங்கள் ஆகியவை சேதமடைந்தது.
பாரில் மது அருந்த தமிழக அரசு தடை விதித்திருந்ததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.