கோவை போத்தனூர் அருகே 108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்குப் பிரசவம்; பெண் குழந்தை பிறந்தது

கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அருகே கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.


கோவை: கோவை மாவட்டம் போத்தனூர் அருகே கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது.

கோவை மாவட்டம் போத்தனூர் அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசிக்கும் சித்ரா (21) என்ற பெண்ணுக்கு இன்று பிரசவ வலி ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு அழைப்பு விடுத்தனர். பின்னர் விரைந்து அங்கு சென்ற 108 பணியாளர்கள் பிரசவ வலியால் துடித்த பெண்ணை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர்.

ஆனால் அந்த பெண்ணுக்கு அதிக வலி ஏற்பட்டதால், அவசரம் உணர்ந்து பைலட் ஆதிலிங்கம் மற்றும் ஸ்டீபன், ஆகியோர் அந்த பெண்ணிற்கு ஆம்புலன்சில் வைத்து பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்தில், அந்த பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தொடர்ந்து, தாய்க்கும்,குழந்தைக்கும் முதலுதவி கொடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவசரத்தை உணர்ந்து, வலியால் துடித்த பெண்ணிற்குப் பிரசவம் பார்த்த 108 மருத்துவ உதவியாளர்களுக்கு பாராட்டு குவிகிறது.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...