கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆசிரியர்களின் பெயர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆசிரியர்களின் பெயர்கள் மாநில நல்லாசிரியர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், மாநில அரசு சார்பில் மாநில நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான வரும் 5ம் தேதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கோவையைச் சேர்ந்த 25 ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் -
மாநில நல்லாசிரியர் விருது பெற ஆசிரியர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் 25 ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரித்து விருது பெற சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் தகுதியுடைய ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.
சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதும், மாநில அரசு சார்பில் மாநில நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான வரும் 5ம் தேதி மாநில நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் கோவையைச் சேர்ந்த 25 ஆசிரியர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு, பட்டியல் தயாரிக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில் -
மாநில நல்லாசிரியர் விருது பெற ஆசிரியர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.
இதனை கருத்தில் கொண்டு கோவை மாவட்டத்தில் 25 ஆசிரியர்களின் பெயர் பட்டியல் தயாரித்து விருது பெற சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில் தகுதியுடைய ஆசிரியர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தனர்.