காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர்களை விரட்டி சென்று பிடித்த காவல்துறையினரை காவல்துறை எஸ்.பி செல்வ ரத்தினம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டு.!!

கோவை: காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர்களை விரட்டி சென்று பிடித்த காவல்துறையினரை காவல்துறை எஸ்.பி செல்வ ரத்தினம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


கோவை: காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர்களை விரட்டி சென்று பிடித்த காவல்துறையினரை காவல்துறை எஸ்.பி செல்வ ரத்தினம் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கோவை மாவட்டம் சூலூர் தாலுகா பகுதியில் காவல்துறை வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது மின்னல் வேகத்தில் ஒரு கார் அவர்களைக் கடந்து சென்றது. உடனடியாக நிறுத்த முயன்றபோது அந்த கார் நிற்காமல் சென்றது.

உடனடியாக விரட்டிச் சென்ற காவலர்கள் அந்த கார் ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு காட்டுக்குள் குற்றவாளிகள் தப்பி ஓடினர்.

தொடர்ந்து காவல்துறை விரட்டிச் சென்று குற்றவாளிகளைப் பிடித்து விசாரணை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவது தெரிய வந்தது. உடனடியாக அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கோவை மாவட்டம், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத் மற்றும் இரண்டு ‌காவலர்கள் செல்லப்பாண்டி, பிரபு ஆகியோர் நீலம்பூர் சுங்க சாவடி அருகே வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது அவ்வழியாக அதிவேகமாக வந்த காரை வழி மறித்து நிறுத்த முயன்றனர். ஆனால் அந்த கார் நிற்காமல் சென்றது.

இதனால் காவல்துறைக்குச் சந்தேகம் ஏற்பட்டு அந்தக்காரை 2 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் துரத்திக் சென்றனர். போலீஸார் துரத்தி வருவதை பார்த்த அந்த வாலிபர்கள் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு அதிலிருந்து இரண்டு பேரும் இறங்கி காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடினர். இருப்பினும் காவல்துறை விடாமல் துரத்திச் சென்று, அவர்களைப் பிடித்து விசாரித்தனர்.



அப்போது இவர்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சட்டவிரோதமாகத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தனர் என்றும், மேற்படி மகேந்திரா மற்றும் அசோக் இரண்டு நபர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து 200 கிலோ கிராம் குட்கா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தைப் பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

இவ்வழக்கில் திறம்படச் செயல்பட்ட காவல்துறையினரைக் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர். செல்வநாகரத்தினம், அவர்கள் பாராட்டினார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...