கோவை: தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2-பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். அவர்கள் மீது பல்வேறு கஞ்சா உட்படக் கொள்ளை வழக்குகள் இருப்பதால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை: தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2-பேரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். அவர்கள் மீது பல்வேறு கஞ்சா உட்படக் கொள்ளை வழக்குகள் இருப்பதால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த அர்ஜுன், கார்த்தி கஞ்சா விற்றதாகக் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். பிடிபட்ட இருவரிடமிருந்தும் 5-கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
கோவை சரவணம்பட்டி காவல்துறை இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் கந்தசாமி கஞ்சா விற்ற இளைஞர்கள் மீது குண்டர் சட்டம் பதியப் பரிந்துரை செய்து இருந்தார்.
அதனடிப்படையில் மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் மீது குண்டர் சட்ட பதியப்பட்டன. அதற்கான ஆவணங்கள் மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டது.
இனி கஞ்சா வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை, சிங்காநல்லூரைச் சேர்ந்த அர்ஜுன், கார்த்தி கஞ்சா விற்றதாகக் காவல் துறையினரிடம் பிடிபட்டனர். பிடிபட்ட இருவரிடமிருந்தும் 5-கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.
கோவை சரவணம்பட்டி காவல்துறை இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்த நிலையில் சரவணம்பட்டி காவல் ஆய்வாளர் கந்தசாமி கஞ்சா விற்ற இளைஞர்கள் மீது குண்டர் சட்டம் பதியப் பரிந்துரை செய்து இருந்தார்.
அதனடிப்படையில் மாநகர காவல் ஆணையர் தீபக் தாமோர் உத்தரவின் அடிப்படையில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் மீது குண்டர் சட்ட பதியப்பட்டன. அதற்கான ஆவணங்கள் மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டது.
இனி கஞ்சா வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.