கோவை: கோவையில் இளைஞர்களை குறி வைத்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கோவை: கோவையில் இளைஞர்களை குறி வைத்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்து வரும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், காவல்துறையின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக, போதை பொருள் விற்பனை செய்யும் ஆசாமிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
நேற்று, கோவை குனியமுத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குறிச்சி குளத்தில் இளைஞர் ஒருவர் இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்று வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தன் பேரில், உடனடியாக ஆய்வாளர் வேல்முருகன், உதவி ஆய்வாளர் கணேஷ் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, போதை பொருள் விற்பனை செய்யபட்டதை உறுதி செய்த போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அந்த நபரின் பெயர் நிஷார் என்பதும் போதைக்காக பயன்படுத்தப்படுகின்ற நைட்ரோசென் மாத்திரையை அந்த நபர விற்றதும் தெரியவந்தது. உடனடியாக, அவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து மாத்திரைகள், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.