கோவை: பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
கோவை: பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள என்.ஜி.எம் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முகாம் நடைபெற்றது.இந்த சிறப்பு முகாமை கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் துவக்கி வைத்தார்.
நிர்வாக மேலாளர் ரகுநாதன், சக்தி மேலாண்மை கல்லூரி இயக்குனர் சுப்பிரமணியம் உள்ளிட்ட கல்லூரி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கல்லூரி உடற்கல்வி துறை மற்றும் என்.சி.சி, என்.எஸ்.எஸ் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள் என 500 பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், நாளை நடக்க உள்ள முகாமிலும் 500 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டனர்.
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளன. இதில் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழக அரசின் சார்பில் சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கல்லூரிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இன்று பொள்ளாச்சி - பாலக்காடு சாலையில் உள்ள என்.ஜி.எம் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முகாம் நடைபெற்றது.இந்த சிறப்பு முகாமை கல்லூரி முதல்வர் முத்துக்குமரன் துவக்கி வைத்தார்.
நிர்வாக மேலாளர் ரகுநாதன், சக்தி மேலாண்மை கல்லூரி இயக்குனர் சுப்பிரமணியம் உள்ளிட்ட கல்லூரி நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் கல்லூரி உடற்கல்வி துறை மற்றும் என்.சி.சி, என்.எஸ்.எஸ் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள் என 500 பேருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும், நாளை நடக்க உள்ள முகாமிலும் 500 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஆர்வத்துடன் தடுப்பூசிகள் செலுத்திக் கொண்டனர்.