கோவை: கோவையில் சிந்தனைக்கவிஞர் டாக்டர். கவிதாசன் அவர்களின் “இந்த நாள் வெற்றித் திருநாள்” புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கோவை: கோவையில் சிந்தனைக்கவிஞர் டாக்டர். கவிதாசன் அவர்களின் “இந்த நாள் வெற்றித் திருநாள்” புத்தகம் வெளியீட்டு விழா நடைபெற்றது.
சொல்லின் செல்வர் சிந்தனைக்கவிஞர் கவிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தனது 76-வது படைப்பாகிய “இந்த நாள் வெற்றித் திருநாள்” என்ற புதிய நூலினை நேற்று (01.09.2021), கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் பெ. காளிராஜ் அவர்கள் வெளியிட முதல் பிரதினை மேலாண்மை துறை இயக்குனர் முனைவர் ரூபா குணசீலன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள் முனைவர் எஸ் தங்கமணி, முனைவர் எஸ் கோகுல் கிருஷ்ணன் மற்றும் முனைவர் எஸ் இளையராஜா ஆகியோர் உள்ளனர்.