பல்லடத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மயானம் அமைத்துத் தர எதிர்ப்பு தெரிவிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக நீதிக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: பல்லடத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மயானம் அமைத்துத் தர எதிர்ப்பு தெரிவிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக நீதிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: பல்லடத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு மயானம் அமைத்துத் தர எதிர்ப்பு தெரிவிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக நீதிக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் ஒன்றியம் மாதப்பூர் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மயான வசதி இல்லாததால் இறப்பவர்கள் உடலை அடக்கம் செய்ய வழியின்றி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவதிக்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட மக்களின் மயான வசதிக்காக அப்பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அப்போது, இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனைத்தொடர்ந்து, இதுகுறித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.



அதில், உடனடியாக மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் மற்றொரு தரப்பினர் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு மயான வசதியை உடனடியாக வருவாய் துறையினரும், காவல்துறையினரும் செய்துதர வேண்டும் என வலியுறுத்தி பல்லடம் கொசவம்பாளையம் சாலை பிரிவில் சமூக நீதிக் கட்சியின் மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் திரண்ட மாதப்பூர் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...