கோவை: கோவையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை: கோவையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க முயன்ற இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கோவை பகுதியில் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
அப்போது, அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாது என அவர்களை தடுத்து அவர்கள் மீது நோய் தொற்று விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை அகில பாரத மக்கள் கட்சி தலைவர் ராமநாதன், இந்து மக்கள் புரட்சி படை சேர்ந்த பீமா பாண்டி, சத்திரபதி சிவாஜி பேரவை நிறுவனர் சரவணன், இந்து மக்கள் கட்சி தமிழகத்தைச் சேர்ந்த காலனி பிரபு, சக்தி சேனா இந்து மக்கள் கட்சி சேர்ந்த சரஸ்வதி உட்பட ஐந்து அமைப்பைச் சேர்ந்த 13 நபர்கள் தடையை மீறி கோயில் வாசலில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்பொழுது, அவர்கள் தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவோம் எல்லா தெருக்களிலும் விநாயகர் சிலை வைத்து வழி படுவோம் என கோஷங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து காந்திபுரம் போலீசார், 13 இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது நோய் தொற்று பரவல் விதிமீறல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பகுதியில் இந்து அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கோவை காந்திபுரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதித்த தமிழக அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
அப்போது, அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் உண்ணாவிரதம் இருக்க முடியாது என அவர்களை தடுத்து அவர்கள் மீது நோய் தொற்று விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கோவை அகில பாரத மக்கள் கட்சி தலைவர் ராமநாதன், இந்து மக்கள் புரட்சி படை சேர்ந்த பீமா பாண்டி, சத்திரபதி சிவாஜி பேரவை நிறுவனர் சரவணன், இந்து மக்கள் கட்சி தமிழகத்தைச் சேர்ந்த காலனி பிரபு, சக்தி சேனா இந்து மக்கள் கட்சி சேர்ந்த சரஸ்வதி உட்பட ஐந்து அமைப்பைச் சேர்ந்த 13 நபர்கள் தடையை மீறி கோயில் வாசலில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.
அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்பொழுது, அவர்கள் தமிழக அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவோம் எல்லா தெருக்களிலும் விநாயகர் சிலை வைத்து வழி படுவோம் என கோஷங்கள் எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து காந்திபுரம் போலீசார், 13 இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மீது நோய் தொற்று பரவல் விதிமீறல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.