அனிதாவின் நினைவு நாளான இன்று பெண் விடுதலை கட்சியின் தலைவர் சபரிமாலா கோவை மாவட்ட ஆட்சியரிடம் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தின் நகலைக் கொடுத்தார்.!!

கோவை: அனிதாவின் நினைவு நாளான இன்று பெண் விடுதலை கட்சியின் தலைவர், சபரிமாலா நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரானிடம் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தின் நகலைக் கொடுத்தார்.


கோவை: அனிதாவின் நினைவு நாளான இன்று பெண் விடுதலை கட்சியின் தலைவர், சபரிமாலா நீட்தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் சமீரானிடம் குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தின் நகலைக் கொடுத்தார்.



அனிதாவின் நினைவு நாளான இன்று பெண் விடுதலை கட்சியின் தலைவர் சபரிமாலா குடியரசு தலைவருக்கு எழுதிய கடிதத்தின் நகலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தார். அரசுப்பள்ளி ஆசிரியராக இருந்த இவர் தன் பதவியை ராஜிநாமா செய்து நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றார்.

நீட் தேர்வு காரணமாகத் தற்கொலை செய்துகொண்ட அனிதா உயிரிழந்து 4-ஆண்டு நிறைவடைந்தநாளான இன்று குடியரசுத் தலைவருக்கு நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தபால் மூலம் கடிதம் அனுப்பப்படும் என்றும், பிரதமருக்கும், நாட்டின் அனைத்து ஆளுநர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்படும் என்று கூறிய சபரிமாலா, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற மகிழ்விலிருந்த நிலையில், நீட்தேர்வு அறிவிப்பு என்பது மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்தார்.

மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கு அனிதவின் பெயரை வைப்பதில் இல்லை ஆறுதல், அனிதா உட்பட 18-மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்ததை நினைவில் வைத்திருக்கிறோம் என்றால் முதலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைக்கிறேன்.

இப்போதும் இந்த ஆட்சி மீது நம்பிக்கை உள்ளதாகவும், ஏதாவது செய்து நீட் தேர்வை ரத்து செய்துவிடுவார்கள் என்று நம்பிக்கை உள்ளதாக குறிப்பிட்டார். நீட் தேர்வு இந்தியா முழுதும் ரத்துசெய்ய வேண்டும் என்பதற்காகக் குடியரசுத் தலைவருக்குக் கடிதம் அனுப்பப்படுவதாகவும், அடுத்தாண்டாவது நீட் தேர்வு ரத்து செய்தல் வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...