விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு போட்டியாக ஜெபயாத்திரை நடத்துவோம்: கோவை கிறிஸ்துவ கல்லூரி தலைவரின் அழைப்பால் சர்ச்சை..!!!

கோவை: கே.என்.ஜி புதூர் பகுதியில் இயங்கி வரும் st.Paul's கல்லூரியின் பெயர் அச்சிடப்பட்ட லெட்டர் பேடில், விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக ஜெபயாத்திரைக்கு கிறிஸ்துவ கல்லூரியின் தலைவர் அழைப்பு விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கே.என்.ஜி புதூர் பகுதியில் இயங்கி வரும் st.Paul's கல்லூரியின் பெயர் அச்சிடப்பட்ட லெட்டர் பேடில், விநாயகர் சதுர்த்திக்கு போட்டியாக ஜெபயாத்திரைக்கு கிறிஸ்துவ கல்லூரியின் தலைவர் அழைப்பு விடுத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் இயங்கி வரும் st.Paul's கல்லூரியின் பெயர் அச்சிடப்பட்ட லெட்டர் பேட் ஒன்றில் "கிறிஸ்துவ சகோதர சகோதரிகளே, மிஷனெரிகளே, மிஷனெரி இயக்க தலைவர்களே, கோவையில் கடந்த 2017ம் ஆண்டிலிருந்து 3-ஆண்டுகளாக நாம் ஜெபயாத்திரை நடத்தியதன் விளைவாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதியில்லாமல் யாரும் விநாயகர் சிலையை வெளியில் வைக்கக் கூடாது.

ஒன்று அல்லது இரண்டு நாட்களில் சிலையைக் கரைத்து விட வேண்டும். போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த சட்டங்களினால் தற்போது விநாயகர் சதுர்த்தியன்று பிரச்சினை வராமல் உள்ளது.

இதற்கு எல்லாம் ஜெபயாத்திரை தான் காரணம் என நம்புகிறோம். அதே போன்று இந்த ஆண்டும் செப்டம்பர் மாதம் 10 தேதி விநாயகர் சதுர்த்தி வருவதால் அன்றைய தினமோ அல்லது அதற்கு முன்போ ஜெபயாத்திரை நடத்த விரும்புகிறேன். இந்த கொரோனா காலத்தில் இப்படிப்பட்ட ஜெபயாத்திரை மிகுந்த பலனளிக்கும் என்று நம்புகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



இதனைக் கண்டித்தும் கல்லூரியின் சேர்மன் டேவிட்டை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னனி அமைப்பினர் துடியலூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையிட்ட அவர்கள் இது போன்ற அறிவிப்பு இந்துக்களுக்கு எதிராக உள்ளதாகவும் இந்து மத நம்பிக்கையை இழிவு படுத்தும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தனர்.

ஆனால் அந்த லெட்டர் பேடில் அக்கல்லூரியின் சேர்மன் டேவிட் அவரது கையொப்பமில்லை என்பது கடந்த 16ம் தேதி லெட்டர் பேட் அச்சிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...