வர்தாவின் ஆவேசத்திற்கு உதகையும் தப்பவில்லை..!


வர்தா என்னும் புயல் கடந்த திங்களன்று சென்னை மாநகரத்தை மையமாகக் கொண்டு பலத்த காற்றுடன் வீசியது. இதில் மணிக்கு 130 முதல் 190 கிலோ மீட்டர் வேகம் வரை காற்றுடன் மழையும் வீசியதால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. இதனால், சென்னைவாசிகளின் இயல்பு வாழ்க்கை தற்போது முற்றிலும் முடங்கிப்போயுள்ளது.

இந்நிலையில், தற்போது, வர்தா புயலைப் போலவே பலத்த காற்றுடன் நீலகிரியிலும் மழை பெய்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கிப்போனது.



நீலகிரி செல்லும் 9-வது கொண்டை ஊசி வளைவு அருகே மரப்பாலம் பகுதியில் பழமையான மரம் ஒன்று வேருடன் சாலையின் குறுக்கே சாய்ந்தது. இதனால், மேட்டுப்பாளையம் முதல் உதகை வரையிலான சாலைப் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.

மேலும், மரம் விழுந்ததைத்தொடர்ந்து, மண் சரிவும் ஏற்பட்டதால் சாலையில் பாறைகளும் விழுந்துள்ளன. அதிர்ஷ்டவசமாக அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் காயமின்றி உயிர்தப்பினர். 



இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த மீட்புப்படையினர் விரைந்து மரத்தினை அகற்றும் பணியில் ஈடுபட்டதைத்தொடர்ந்து போக்குவரத்து சீரடைந்துள்ளது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...