கோவை: வால்பாறையில் ஒரு வருடத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் ஒரு வருடத்திற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, 9, 10, 11, 12ம் வகுப்புகள் இன்று முதல் துவங்குகின்றன. வால்பாறையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பள்ளியின் நுழைவாயிலில் மாணவ, மாணவிகளுக்கு கைசுத்திகரிப்பு திரவம் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தொடர்ந்து உடல் வெப்பமானி பரிசோதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மாணவர்கள் வருகை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.

மேலும், மாணவர்களுக்கு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஏற்படுத்தப்படுகிறது. இன்று பள்ளி தொடங்கிய முதல் நாளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, 9, 10, 11, 12ம் வகுப்புகள் இன்று முதல் துவங்குகின்றன. வால்பாறையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி மாணவர்கள் பள்ளியில் அனுமதிக்கப்படுகின்றனர்.
பள்ளியின் நுழைவாயிலில் மாணவ, மாணவிகளுக்கு கைசுத்திகரிப்பு திரவம் வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தொடர்ந்து உடல் வெப்பமானி பரிசோதனை நடைபெறுகிறது. தொடர்ந்து மாணவர்கள் வருகை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
மேலும், மாணவர்களுக்கு முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் ஏற்படுத்தப்படுகிறது. இன்று பள்ளி தொடங்கிய முதல் நாளில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்துள்ளனர்.