கோவை: கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு மற்றும் தடுப்பூசி சான்று அவசியம், நோய்த் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கோவை: கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பதிவு மற்றும் தடுப்பூசி சான்று அவசியம், நோய்த் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் இருப்பதால் ஒவ்வொரு மாநில அரசும் தங்களுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியும் கேரளாவில் நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது.
கோவை மாவட்டத்திலிருந்து கேரளா செல்வதற்கு சுமார் பதிமூன்று வழித்தடங்கள் உள்ளது. குறிப்பாகப் பொள்ளாச்சியிலிருந்து ஆறு வழித்தடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல தேவைகளுக்காகக் கேரளா மாநிலம் சென்று திரும்புகின்றனர்.
இதனால் தமிழகத்தில் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே கேரளா மாநிலத்திலிருந்து வருபவர்கள் கொரோனா நோய்க்கான இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் தமிழகத்திற்குள் நுழைவதற்காக இ-பதிவு செய்திருக்க வேண்டும்.
இல்லையேல் கண்டிப்பாக காவல்துறையால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் போன்ற அதிகப்படியான கட்டுப்பாடுகளைக் கோவை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.

தமிழகத்திலிருந்து கேரளா சென்று திரும்புபவர்கள் கண்டிப்பாகத் தமிழக எல்லையான கோபாலபுரம், நடுப்புனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் சோதனைக்குப் பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்று அதிகளவில் இருப்பதால் ஒவ்வொரு மாநில அரசும் தங்களுக்கென சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியும் கேரளாவில் நோய் பரவல் அதிகம் காணப்படுகிறது.
கோவை மாவட்டத்திலிருந்து கேரளா செல்வதற்கு சுமார் பதிமூன்று வழித்தடங்கள் உள்ளது. குறிப்பாகப் பொள்ளாச்சியிலிருந்து ஆறு வழித்தடங்கள் உள்ளது. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பல தேவைகளுக்காகக் கேரளா மாநிலம் சென்று திரும்புகின்றனர்.
இதனால் தமிழகத்தில் நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனவே கேரளா மாநிலத்திலிருந்து வருபவர்கள் கொரோனா நோய்க்கான இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டதற்கான சான்றிதழ் மற்றும் தமிழகத்திற்குள் நுழைவதற்காக இ-பதிவு செய்திருக்க வேண்டும்.
இல்லையேல் கண்டிப்பாக காவல்துறையால் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் போன்ற அதிகப்படியான கட்டுப்பாடுகளைக் கோவை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது.
தமிழகத்திலிருந்து கேரளா சென்று திரும்புபவர்கள் கண்டிப்பாகத் தமிழக எல்லையான கோபாலபுரம், நடுப்புனி, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் சோதனைக்குப் பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.