நிதி நிறுவன மோசடி: கோவை டான்பிட் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..! 10-ஆண்டு சிறை, ரூ.2.76-கோடி அபராதம்

கோவை: கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு ரூபாய். 2.76 கோடி அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிதி நிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிதி நிறுவன உரிமையாளருக்கு ரூபாய். 2.76 கோடி அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் செயல்பட்டு வந்த மேய்ஸ் குரூப் ஆப் டெக்னாலஜி (Maze group of technology) என்ற நிறுவனம், முதலீடு தொகைக்கு 10 நாட்களில் இரட்டிப்பாகப் பணம் தருவதாகக் கூறி, விளம்பரம் செய்துள்ளனர். அந்த விளம்பரத்தைப் பார்த்த பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால், அறிவித்தது போல், தொகையைத் தராமல் ஏமாற்றியதை அடுத்து, பாதிக்கப்பட்ட முதலீட்டாளரான சின்னசாமி என்பவர் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், கடந்த 2010 ல் வழக்குப் பதிவு செய்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், 86 முதலீட்டாளர்களிடம் ரூபாய் 4 கோடியே 96 லட்சத்து 30 ஆயிரத்து 862 மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.

கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

மோசடியில் ஈடுபட்ட, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 8 பேரின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த புகழேந்திக்கு மட்டும் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் , ரூபாய் 2 கோடியே 76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், விதிக்கப்பட்ட அபராத தொகையில் ரூபாய் 2 கோடியே 75 லட்சத்தைப் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்குத் திருப்பி வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பின் போது, இன்று நீதிமன்றத்தில் குற்றவாளியான புகழேந்தி ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையே, நிறுவனத்தின் மற்றொரு உரிமையாளரான இந்த வழக்கில் 2 வது நபராகச் சேர்க்கப்பட்ட ராஜா மீதான வழக்கு தனியாகப் பிரிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதுதவிர, நிறுவன ஊழியர்களான 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மீதான வழக்கு நிரூபிக்கப்படாததால் 5 பேரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்நிறுவன உரிமையாளர்களான புகழேந்தி, ராஜா ஆகிய இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...