பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவர் கைது: 102-மது பாட்டில்கள் பறிமுதல்.!!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு 102-மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டு 102-மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலர், அரசு மதுபானங்களைப் பதுக்கி விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி கிழக்கு காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது ஊஞ்சவேலம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்ற நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த முருகன்(44), என்பது தெரியவந்தது.

மேலும் அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தார். இதையடுத்து, அவரை சோதனையிட்டதில் கையில் வைத்திருந்த ஒரு பெட்டியில் அரசு மதுபானங்கள் இருப்பது தெரியவந்தது.

பின்னர், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், பூசாரிபட்டி டாஸ்மாக் கடையிலிருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து, சட்டவிரோதமாகப் பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.



இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை 102-மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து முருகனைக் கைது செய்தனர்.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...